---Advertisement---

செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி! இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

By Sri
Published on: April 16, 2020
TN CM Edappadi Palanisamy
---Advertisement---

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேலும் 25 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று வரைக் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக இருந்தது. வழக்கமாக சுகாதாரத்துறை செயலாளர் அல்லது மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து நிலவரங்களை பகிர்ந்து வந்த நிலையில் இன்று முதன் முறையாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

 அப்போது பேசிய அவர் ‘அரசின் தீவிர நடவடிக்கையால் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றும் மேலும் 25 பேர்களுக்குக் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1267ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை குணமாணவர்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31, 38, 25 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.