---Advertisement---

200 குடும்பங்களுக்கு உணவளிக்கும் ரகுல் ப்ரீத் சிங்

Published on: April 4, 2020
Rakul Preeth Singh
---Advertisement---

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால், அனைத்து மாநிலங்களுமே வெறிச்சோடி உள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உள்ள நம் நாடு எப்போது பழையபடி திரும்பும் என்று பலர் எதிர்பார்த்து வருகின்றனர்.

கொரோனா கலவரத்தால் நடுத்தர குடும்பத்தினர் ஓரளவுக்கு தங்கள் தேவைகளை சமாளித்துக் கொண்டு வருகின்றனர். ஆனால் அன்னாட காட்சிகளின் நிலைமை என்ன என்பதே பலருக்கும் தெரியாத ஒன்று. இதில் பலர் பிளாட்பார கடைகளையும், தினக்கூலி தொழிலாளர்களாகவும், இன்னும் சிலர் அன்றாட தொழிலை நம்பி பிழைப்போரும் உள்ளனர்.

இந்நிலையில் நடிகை ராகுல் பிரீத் சிங் 200 குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளார். தன் வீட்டின் அருகே உள்ள ஏழை மக்களுக்கு சுமார் 200 குடும்பங்களுக்கு நாள்தோறும் உணவு கொடுத்து வருகிறார்.

Rakul Preeth Singh FI
Rakul Preeth Singh FI

இதைப்பற்றி அவர் கூறுகையில், நாம் என்னதான் சினிமா துறையில் சம்பாதித்தாலும் நமக்கான காலம் வரும்போது நம் சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து தான் ஆக வேண்டும், நான் இந்த அவசிய நேரத்தை கருத்தில் கொண்டு எனக்கான கடமையை செய்வதாக கருதுகிறேன், என்று மனிதாபிமானத்துடன் கூறியுள்ளார்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.