---Advertisement---

கமல், தனுஷ், ஷங்கர் – சினிமா தொழிலாளர்களுக்கு நிதியுதவி!

By Sri
Published on: March 26, 2020
kamal
---Advertisement---

சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக நடிகர் மற்றும் அரசியல்வாதி கமல்ஹாசன் 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றும் லட்சக்கணக்கானவர்களை பாதித்தும் வரும் சூழ்நிலையில் அது மேலும் பரவாமல் தடுகும் விதமாக மக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க சொல்லப்பட்டது.  இதன் ஒரு கட்டமாக சினிமா படப்பிடிப்புகளும் கடந்த 19 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சினிமாவில் தினக்கூலிகளாக இருந்து வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு உதவும் விதமாக நடிகர் சிவக்குமார் 10 லட்சம்  ரூபாய் உதவித்தொகையாக வழங்கியுள்ளார். இதை அவர், தமிழ் திரை தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணியிடம் அளித்துள்ளார். இதுபோல மற்ற முன்னணி நடிகர்களும் உதவிக்கரம் நீட்டவேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் (10 லட்சம்), ரஜினி (50 லட்சம்), விஜய்சேதுபதி (10 லட்சம்), தயாரிப்பாளர் தாணு (250 மூட்டை அரிசி)  மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் (150 அரிசி மூட்டை) ஆகியோர் நிவாரணமாக அளித்திருந்தனர். இதையடுத்து இப்போது நடிகர் கமல்ஹாசன்(10 லட்சம்), நடிகர் தனுஷ் (15 லட்சம்), இயக்குனர் ஷங்கர் (10 லட்சம்), பி வாசு (1 லட்சம்) என நிதியுதவி அளித்துள்ளனர். மேலும் இயக்குநர் ஹரி 100 அரிசி மூட்டைகள் (25 கிலோ வீதம்), நடிகர் சூரி – 8 அரிசி மூட்டைகள், மனோபாலா 10 அரிசி மூட்டைகள் என பொருட்களாக அளித்துள்ளனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.