---Advertisement---

சுரேஷ் ரெய்னாவுக்கு இரண்டாவது குழந்தை – டிவிட்டரில் மகிழ்ச்சி !

By Sri
Published on: March 24, 2020
---Advertisement---

இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

இந்திய அணியின் நடுவரிசை ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா சமீபகாலமாக அணியில் இடம் கிடைக்காமல் போராடி வருகின்றார். அதனால் உள்ளூர் தொடர்களிலும், ஐபிஎல் போட்டிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக அவரது குடும்பத்திற்கு புதுவரவாக இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. ரெய்னா தம்பதிகளுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் இப்போது மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்த தனது மகிழ்ச்சியை ‘எல்லாவற்றினுடைய தொடக்கம். எங்கள் மூத்த மகன் ரியொ ரெய்னாவின் தம்பி வருகைக்கு நாங்கள் பெருமைப்படுகிறோம். அவன் எல்லைக்கு அப்பாற்பட்டு, அமைதியும், புதுமையும்,  செழுமையும் எல்லோரது வாழ்க்கையிலும் கொண்டு வருவான்’ எனக் கூறியுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.