இந்திய திரையுலகில் தங்களது வெறித்தனமான மற்றும் துள்ளலான இசையால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் பல வருடங்களாகக் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் தான் நம்ம ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் (Devi Sri Prasad – DSP). மேடைகளில் இவரோட எனர்ஜியைப் பார்க்கும் போதே நமக்கெல்லாம் தானாகவே டான்ஸ் ஆடத் தோன்றும். தற்பொழுது ‘எல்லம்மா’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரமெடுத்துள்ள இவர், அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தங்களது பள்ளிப்பருவ நினைவுகள் மற்றும் இசைஞானி இளையராஜா (Ilaiyaraaja) குறித்துப் பகிர்ந்துள்ள ஒரு உருக்கமான பிளாஷ்பேக் தான் இப்போ இணையம் முழுக்க பயங்கர வைரலாகப் பேசப்பட்டு வருது.
தங்களது பள்ளிப்பருவ நினைவுகளைப் பகிர்ந்த தேவி ஸ்ரீ பிரசாத், “எங்க ஸ்கூல்ல படிக்கும்போது, நீங்க பெருசானதும் என்னவாகப் போறீங்கன்னு டீச்சர்ஸ் எல்லாரையும் பார்த்து ஒரு கேள்வி கேட்டாங்க; அப்போ அங்கிருந்த முக்கால்வாசி பசங்க டாக்டர், இன்ஜினியர் அப்படின்னு தான் சொன்னாங்க” என்று பேசியுள்ளார். ஆனா, எல்லாரையும் போல ஒரே மாதிரியான பாதையைத் தேர்ந்தெடுக்க விரும்பாத டிஎஸ்பி, அந்த சின்ன வயசிலேயே எல்லாரும் ஆச்சரியப்படும்படியா, “நான் ஒரு மியூசிக் கம்போஸர் (Music Composer) ஆகப் போறேன்” அப்படின்னு ரொம்பவே கெத்தா சொல்லியிருக்காரு.
சின்ன பையன் மியூசிக் டைரக்டர் ஆகப்போறேன்னு சொன்ன உடனே, அங்கிருந்த ஒட்டுமொத்த கிளாஸ் ரூமும் இவரைப் பார்த்து ரொம்பவே கிண்டலா சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுமட்டுமில்லாம, அடுத்த நாள்ல இருந்தே கிளாஸ்ல இருந்த பசங்க எல்லாரும் இவரை வம்புக்கிழுக்குறதுக்காகவும், நக்கல் பண்றதுக்காகவும் ‘இளையராஜா’ அப்படின்னு சொல்லி கூப்பிட ஆரம்பிச்சிருக்காங்க. “அவங்க என்னை நக்கல் பண்றதா நினைச்சுட்டு அப்படி கூப்பிட்டாங்க, ஆனா நான் அதை எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய பெருமையா, ஒரு காம்ப்ளிமென்ட்டா (Compliment) தான் எடுத்துக்கிட்டேன். ஏன்னா, இந்த உலகத்துல இசைஞானி இளையராஜா சாரோட நம்மள ஒப்பிட்டுப் பேசுறதை விட ஒரு மியூசிக் லவ்வர்ருக்கு வேற என்ன பெரிய விஷயம் கிடைச்சிட போகுது?” என்று ரொம்பவே பக்குவமாகவும் உருகியும் பேசியிருக்காரு டிஎஸ்பி.
அன்று வகுப்பறையில் கிண்டல் செய்தவர்களுக்கு மத்தியில், இன்று இந்திய சினிமாவே கொண்டாடும் ஒரு டாப் ராக்ஸ்டாராக தேவி ஸ்ரீ பிரசாத் சாதித்துக் காட்டியுள்ள இந்த நிஜ வாழ்க்கை கதை தான் இப்போ ரசிகர்களை ரொம்பவே நெகிழ வச்சிருக்கு.













