சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. சமீபகாலமாக திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர், சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது போட்டோஷூட் மற்றும் பயணப் புகைப்படங்களைப் பகிர்ந்து வரும் ரச்சிதா, தற்போது தேயிலைத் தோட்டம் ஒன்றில் எடுத்த அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியில், பசுமையான தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே ரிலாக்ஸாக இருக்கும் இந்தப் புகைப்படங்களுக்கு “An evening into the teasssssss…” என ரச்சிதா கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது ரசிகர்கள் “ரொம்ப க்யூட்டா இருக்கீங்க” என கமெண்ட் செக்ஷனில் தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
View this post on Instagram
ரச்சிதாவின் கேரியரைப் பொறுத்தவரை, 2026-ம் ஆண்டு அவருக்கு ஒரு முக்கியமான ஆண்டாக அமைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வெளியான அவரது ’99/66′ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதற்கு முன்னதாக வெளியான ‘ஃபயர்’ (Fire) திரைப்படம் அவருக்கு ஒரு புதிய இமேஜைக் கொடுத்தது. தற்போது வரிசையாகப் பல படங்களில் கமிட்டாகி வரும் ரச்சிதா, இந்தச் சிறிய இடைவேளையைத் தனது மன அமைதிக்காக இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் செலவிட்டு வருவதாகத் தெரிகிறது.
சமீபத்தில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது கூட, விஜய் பாணி உடையில் வந்து வாக்கு செலுத்தி செய்திகளில் இடம்பிடித்தார் ரச்சிதா. தற்போது ஷூட்டிங் இல்லாத நேரத்தில் தேயிலைத் தோட்டத்திற்குச் சென்றுள்ள அவர், அங்குள்ள அமைதியான சூழலை ரசித்து வருகிறார். இவரது இந்தப் புதிய லுக் மற்றும் புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகி வருகிறது.













