மலையாளத் திரையுலகில் தற்போது ஒரு செம்ம மாஸ் கூட்டணி உருவாகியுள்ளது. ‘மின்னல் முரளி’ படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் பாசில் ஜோசப் மற்றும் டோவினோ தாமஸ் கூட்டணி, தற்போது மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்துள்ளனர். இந்தப் படத்திற்கு ‘அதிரடி’ (Athiradi) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலம் பாசில் ஜோசப் தயாரிப்பாளராகவும் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்தப் படத்தில் பாசில் ஜோசப் மற்றும் டோவினோ தாமஸுடன் இணைந்து வினித் சீனிவாசனும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாளத்தின் இந்த மூன்று பெரும் துருவங்கள் முதன்முறையாக ஒரு முழுநீளத் திரைப்படத்தில் இணைவதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிக் கிடைக்கிறது. ‘மின்னல் முரளி’ படத்தின் இணை எழுத்தாளரான அருண் அனிருதன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இது ஒரு ஆக்ஷன் காமெடி கலந்த கமர்ஷியல் படமாக இருக்கும் எனத் தெரிகிறது.
View this post on Instagram
நீண்ட நாட்களாக இந்தப் படத்தின் ரிலீஸ் தேதிக்காகக் காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது ஒரு ஸ்வீட் நியூஸ் கிடைத்துள்ளது. ‘அதிரடி’ திரைப்படம் வரும் மே 14, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. சம்மர் ரேஸில் இந்தப் படம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
பாசில் ஜோசப் இந்தப் படத்தில் ‘சாம்குட்டி’ என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டோவினோ தாமஸ் மற்றும் வினித் சீனிவாசன் ஆகியோருக்கும் மிகவும் வித்யாசமான மற்றும் வெயிட்டான ரோல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாம். விஷ்ணு விஜய் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஓவர்சீஸ் மற்றும் விநியோக உரிமைகளுக்கு இப்போதே பெரிய டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு ஒரு தரமான என்டர்டெய்னர் படமாக ‘அதிரடி’ அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.













