சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் உருவாக்கி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைப் பற்றிய ஒரு அதிரடித் தகவல் தற்போது கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்தப் படத்தில் ஒரு பவர்ஃபுல் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க தெலுங்கு சூப்பர்ஸ்டார் நந்தமூரி பாலகிருஷ்ணாவை படக்குழு அணுகியிருந்தது. ஆனால் அவர் கேட்ட சம்பளத்தைக் கேட்டு தயாரிப்பு நிறுவனம் தற்போது பின்வாங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
வெறும் 20 நாள் கால்ஷீட்டிற்கு நடிகர் பாலகிருஷ்ணா சுமார் 50 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகத் தெரிகிறது. ஒரு கேமியோ ரோலுக்கு இவ்வளவு பெரிய தொகையைச் செலவிடுவது பட்ஜெட்டைப் பாதிக்கும் என்று கருதிய சன் பிக்சர்ஸ் நிறுவனம், பாலகிருஷ்ணாவுக்குப் பதில் வேறு ஒரு மாஸ் நடிகரை தேட முடிவெடுத்துள்ளதாம். இதனால் தற்போது தெலுங்கு சினிமாவில் இருந்து எந்த ஒரு முன்னணி ஹீரோவும் இல்லாமல் படத்தை முடிக்க நெல்சன் திட்டமிட்டுள்ளார்.
பாலகிருஷ்ணா இல்லையென்றாலும் ரசிகர்களைத் திருப்திப்படுத்த… மற்ற மொழிகளின் டாப் ஸ்டார்களை நெல்சன் ஏற்கனவே களமிறக்கிவிட்டார். பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் மற்றும் கன்னட ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோர் உறுதியாக ஜெயிலர் 2-வில் தோன்றுவது உறுதியாகியுள்ளது. குறிப்பாக ஷாருக்கான் – ரஜினி காம்போ ஸ்கிரீன்ல வரும்போது தியேட்டர் சும்மா அதிரும்னு ரசிகர்கள் இப்போதே வெயிட்டிங்.

இந்த மெகா ஸ்டார்கள் இணையும் காட்சிகள்… ஹைதராபாத்தில் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. பாலகிருஷ்ணா விவகாரத்தில் படக்குழுவின் இந்தத் துணிச்சலான முடிவு, படத்தின் பட்ஜெட்டைச் சீராக வைக்க உதவும் என்று திரைத்துறை வல்லுநர்கள் பாராட்டி வருகின்றனர். இதற்கிடையில், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் வித்யா பாலன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
2026 கோடை விடுமுறையில் ‘டைகர்’ முத்துவேல் பாண்டியன் மீண்டும் தியேட்டர்களில் கர்ஜிக்கப் போகிறார். அனிருத்தின் அதிரடி இசையில் பாடல்கள் மற்றும் டீசர் குறித்த அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலகிருஷ்ணா வராதது ஒரு பக்கம் ஏமாற்றமாக இருந்தாலும், ஷாருக்கான் மற்றும் மோகன்லால் போன்ற ஜாம்பவான்களின் கூட்டணி அந்த இடத்தைப் பூர்த்தி செய்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.













