காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்து இருக்கின்றது.
அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது “இன்று நாளை மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை அது மட்டுமில்லாமல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் பிற இடங்களில் இருந்து கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள்.
இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு திட்டமிட்டு இருக்கின்றது. சென்னைக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் 395 பேருந்துகளும் நாளை முதல் 345 பேருந்துகளும் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு இன்று முதல் 70 பேருந்துகளும், நாளை முதல் 70 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டிருக்கின்றது. மாதாவரத்தில் இருந்து இன்று 20 பேருந்துகள், நாளை 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்புவதற்கு வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. தொலைதூரப் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க தங்களின் பயணத்திற்கு என்ற மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். இந்த சிறப்பு பேருந்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.













