---Advertisement---

உணவு ஆர்டர் செய்யறது கூட பாதுகாப்பில்லாததுதான்… டெலிவரி நபரின் செய்கை… விவரமாக சொன்ன பெண்…!

By Sri
Published on: August 29, 2024
---Advertisement---

உணவு ஆர்டர் செய்யப்பட்டு அதனை எடுத்து வந்த டெலிவரி முகவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என்று ஒரு பெண் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் தனது சமூக வலைதள பக்கத்தில் நடந்த விஷயத்தை பகிர்ந்து இருக்கின்றார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருந்ததாவது “கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அகமதாபாத்தில் கனமழை பெய்து வந்தது.  இதனால் சோமாட்டோவில் காபி ஒன்றை ஆர்டர் செய்தேன். ஆனால் என்னுடைய ஆர்டர் தாமதமாக தான் வந்தது. தாமதமாக வந்தாலும் மழை பெய்ததால் சூழ்நிலையைப் புரிந்து கொண்டேன்.

ஸ்வேதாங் ஜோஷி என்ற நபர் தான் என்னுடைய ஆர்டரை கொண்டு வந்தார். மேலும் தாமதமானதற்கு என்னிடம் மன்னிப்பு கேட்டார் .பின்னர் தனது பாதத்தில் அடிபட்டதாக அவர் கூறிக் கொண்டே இருந்தார். இதனால் டார்ச் அடித்த பாதத்தை பார்க்க முயன்ற போது அவரின் பிறப்புறுப்பு வெளிப்பட்டது.

அப்போது அந்த நபர் சிரித்துக் கொண்டே கேலியாக தன்னிடம் உதவி செய்யுங்கள் என்று கேட்டார். உடனடியாக இதுகுறித்து டொமேட்டோ நிறுவனத்திற்கு தெரிவித்ததாகவும் அவர்களின் பதில் மேலும் தன்னை துயரப்படுத்தியதாக தெரிவித்திருந்தார். அதிகாலை ஒரு மணிக்கு யாரும் பணத்தை திரும்ப பெறுவதற்கு சோமாட்டோ வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ள மாட்டார்கள்.

எனக்கு நடந்த விஷயத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் இருதரப்பிலும் என்ன நடந்தது என்று கேட்பதாக கூறினார்கள். மீண்டும் தொடர்பு கொள்வதாக கூறினார்கள். ஆனால் தற்போது வரை என்னை தொடர்பு கொள்ளவில்லை” என்று அந்த பதிவில் அவர் தெரிவித்திருந்தார். தற்போது ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வது கூட பாதுகாப்பற்றது தான் என்று அந்த பெண் பகிர்ந்து இருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.