வீக் என்ட் வந்துட்டே எங்கயாவது போகாலம்னு நினைக்கும் போதே இப்போதைய ட்ரெண்ட் குற்றாலம் தான் நினைவுக்கு வரும். ஆனால் நேற்று காலையில் குற்றாலத்தில் காணப்பட்ட சீசன் நிலவரத்தை பற்றி தெரிந்தால் இப்போ வேண்டாம் இன்னொரு நாளைக்கு போய்க்கலாம் என சொல்ல வைத்தது. ஆனால் நேற்று மாலையிலிருந்தே டோட்டலா சேஞ்ச் ஆனது சீசன்.
வீக் என்ட் சர்ப்ரைஸ் கொடுத்து விட்டது குற்றால அருவிகள் சுற்றுலா பயணிகளுக்கு என்றே தான் சொல்லி ஆகனும் போல. நேற்று மாலை திடீரென அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எதிர்பாராத நேரத்தில் பெய்த மழையால் அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டியது தண்ணீர். இதனால் ஐந்தருவியில் குளிக்க இன்று காலை தடை விதிக்கப்பட்டது. சராசரியாக விழுந்த தண்ணீரின் அளவை உறுதி செய்த பிறகே குளிக்க விடப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டது.

இன்று காலை பதினோருமணி நிலவரப்படி அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு எந்த தடையும் கிடையாது. ஜிலுஜிலு தென்றல் காற்று வீசி வருவதால் இதமான நிலையே இருந்தது. வானம் கரு மேகங்களால் கூராப்பு போட்டதால் இதமான சூழல் காணப்பட்டது. பாறை இடுக்குகளில் வெள்ளி நிறத்தில் விழுந்த அருவியின் தண்ணீரை பார்த்தாலே ஆனந்தக்குளியலின் ஆவல் அதிகரித்து விடும்.
வார இறுதி நாட்கள் இன்றும் நாளையும் என்பதால் அதிகமான கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதமாக இன்ரு காலை முதலே கூட்டம் அதிகரிக்கத்துவங்கிவிட்டது. சுற்றுலா பிரியர்கள் இனி டைம் வேஸ்ட் பண்ணவேண்டாம், உடனே வண்டிய ஸ்டார்ட் பண்ணிடலாம்ன்னு சொல்லுகின்ற மாதிரியே இருந்தது காலை பதினோரு மணி நிலவரம்.







