தமிழகத்தில் நடைபெற்று வரும் பாலியல் குற்றங்களில் அனைத்து குற்றங்கள் வரை திமுக ஆட்சியை முன்னாள் முதல்வர் எடப்பாடி விமர்சனம் செய்துள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்ற இந்த 10 மாதங்களிலேயே, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து பெருமளவில் அதிகரித்து வருகிறது, பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறி வரும் நிலை உருவாகியுள்ளது, பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய
சூழ்நிலை ஏற்பட்டுள்ள காரணத்தினால், இன்று (07.04.2022) காலை சென்னையிலுள்ள எனது இல்லத்தில் அஇஅதிமுக சார்பில் பல்வேறு கல்லூரி மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு ஆபத்து காலங்களில் கயவர்களிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது என முன்னாள் முதல்வர் எடப்பாடி கூறியுள்ளார்.













