உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான போரை தொடுத்து வருகிறது. போரை நிறுத்த சொல்லி உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்ற போதிலும் ரஷ்ய அதிபர் புடின் கொஞ்சம் கூட கேட்பதாய் இல்லை.
இன்றும் உக்ரைன் தலைநகர் மீது ஏவுகணை தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது.
இதனால் அங்கு வாழும் இந்தியர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு வாழும் தமிழர்களை காப்பாற்ற சென்னை எழிலகத்தில் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் சிக்கி தவிப்பவர்கள் இங்கிருக்கும் அவரது பெற்றோர்கள் உறவினர்கள் 1070 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம் என கூறப்பட்டுள்ளது.













