தமிழில் ஒரு சில படங்களில் குத்தாட்டம் போட்டவர் நடிகை முமைத்கான்.கவர்ச்சி நடிகையான இவர் போதைப்பொருள் விவகாரத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானாவில் சில நாட்கள் முன் கால்வின் மஸ்கேரன்ஹாஸ் உள்ளிட்ட 3 பேரை தெலங்கானா கலால் துறையினர் கடந்த 2017 ஜூலையில் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து போதைப் பொருள் தொடர்பான பல்வேறு வழக்குகளில் 20-க்கும்மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த பலருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. நடிகை சார்மி, இயக்குனர் பூரி ஜெகன்னாத் உள்ளிட்டோர் ஏற்கனவே இது குறித்து விசாரணையில் உள்ளனர்.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் 8-வது நபராக நடிகை முமைத் கான் ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர்.







