---Advertisement---

நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்த மாணவன் உடலுக்கு கல்வி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ உதயநிதி அஞ்சலி

Published on: September 12, 2021
---Advertisement---

இன்று மருத்துவத்திற்கான நீட் தேர்வு நடக்கிறது. நீட் தேர்வு காரணமாக அந்த நேரத்தில் சில மாணவர்கள் தற்கொலை செய்வது வாடிக்கையாக உள்ளது, இன்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவர் நீட் தேர்வு காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் அவரின் உடலுக்கு கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி, சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

நீட் தந்த மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட மேட்டூர் மாணவன் தனுஷின் வீட்டுக்குசென்று அவரின் உடலுக்கு மரியாதை செய்து பெற்றோருக்கு ஆறுதல் கூறினோம். இன்னோர் உயிர் போகாமல் காக்க அனைவரும் ஒன்றிணைந்து நீட் தேர்வை ரத்து செய்ய போராடுவோம் என உதயநிதி டுவிட் இட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.