தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து தற்போது தெலுங்கானா கவர்னராக பதவி வகிப்பவர் டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன் . இவர் பாஜகவை சேர்ந்தவர் என்றாலும் இவரின் தந்தை குமரி அனந்தன் பாரம்பரியமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். குமரி அனந்தனின் மனைவி இன்று காலமானார்.
தனது தாயின் மறைவு குறித்து கூறியுள்ள டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன்
என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார்…
என் தாயாரின் இறுதி ஆசைப்படி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மாலை 04.00 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக என் தாயாரின் உடல் வைக்கப்பட்டு நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.













