தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி.பி முத்து ஆரம்பத்தில் டிக் டாக்கில் மோசமான வசவு வார்த்தைகளால் எல்லோரையும் திட்டியே ஃபேமஸ் ஆகிவிட்டார். இவரை தெரியாதவர்களை சமூக வலைதளத்தில் விரல் விட்டு எண்ணிவிடலாம்.
எல்லோருமே இவரை அறிந்திருப்பார்கள் அறியாதவர்கள் குறைவுதான். இவர் நகைச்சுவையும் செய்வதாலும் இவரின் திருநெல்வேலி டைப் வசவு வார்த்தைகள் பேச்சுக்கள் பலருக்கு பிடித்திருப்பதாலும் இவருக்கு டிவி, சினிமா வாய்ப்புகள் வந்து குவிகின்றன. சொந்தமாக யூ டியூப் சேனலும் ஒன்று வைத்து அதில் ரசிகர்களின் லெட்டர்களை வாசித்து காமெடி செய்து வருகிறார்.
ஆதித்யா சேனலில் ஒரு நிகழ்ச்சி செய்தார். ஒரு சில படங்களிலும் நடித்து வரும் ஜிபி முத்து தற்போது நடிகர் சந்தானத்தை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்







