முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அதிரடிக்கு சொந்தக்காரர். கடந்த வருடம் பாஜகவில் சேர்ந்தார். சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதிக்கு பாஜக எம்.எல்.ஏ ஆக நின்றார் அதில் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் அதிரடியாக தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சிரவை ஆதினத்திடம் ஆசி பெற்றார்.
இது குறித்து அண்ணாமலை கூறியது என்னவென்றால்,
தமிழ்நாட்டில் அறம் தழைத்தோங்கி, ஒற்றுமையும், நல்லிணக்கமும் விளங்க, தேசம் செழிப்புற, ஒவ்வொரு தமிழரின் வாழ்விலும் வளம் சேர வேண்டும் என்று சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகளிடம் ஆசீர்வாதம் பெற்றேன்













