திரையுலக மார்க்கண்டேயன் என பலரால் போற்றப்படுபவர் சிவக்குமார் திரையுலகில் மிக சிறந்த ஒழுக்கத்திற்கு உதாரணமாக இவர் கூறப்படுகிறார். இவரது மகன்களான சூர்யா ,மற்றும் கார்த்தியும் மிகவும் நல்லதொரு மனிதர்களாக சினிமா ரசிகர்களால் போற்றப்படுகிறார்கள்.
இதில் கார்த்தி தற்போது
பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்
இந்நிலையில் புகைபிடிக்கும் காட்சி குறித்து பேசிய கார்த்தி, “கோடி ரூபாய் கொடுத்தாலும் புகைபிடிக்கும் படி படங்களில் நடிக்கமாட்டேன். பெரும்பாலும் புகைபிடிக்கும் காட்சிகளை தவிர்த்து வருகிறேன்” என கூறியுள்ளார்.
மேலும் இதுவரை ஒரு புகைபிடிக்கும் காட்சியில் கூட நடிக்காத இரண்டு நடிகர்கள் கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் மட்டுமே தான்.







