இன்று உலகம் முழுவதும் ரம்ஜான் பெருநாள் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான இந்த பண்டிகை ஒரு மாதம் நோன்பிருந்து கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகைக்காக பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ஒரு பாடலை உருவாக்கியுள்ளார். இந்த பாடலை யுவனும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் மகனுமான அல் அமீன் இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.







