---Advertisement---

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – CBCID-க்கு மாற்றம்!

By Sri
Published on: March 14, 2019
பொள்ளாச்சி வழக்கு
---Advertisement---

பொள்ளாச்சி, பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது சிபிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிபிசிஐடி விசாரணையின் போது, சிபிசிஐடி அதிகாரிகள் அந்த வழக்கு சம்பந்தமான தகவல் ஏதேனும் தெரிந்தால், அதை தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தனர். கோவை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் வந்து புகார் அளிக்கலாம், பொது மக்கள் அளிக்கும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படோரின் நலன் கருதி வழக்கு சம்பதமான வீடியோ ஆதாரங்களை வெளியிட வேண்டாம் என அறிவித்துள்ளது.

இந்நிலையில், முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி சோதனை செய்து வருகிறது.

தற்போது அந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்திரவிட்டு உள்ளது.
அந்த விசாரணை ஐகோர்ட் நீதிபதி மேற்பார்வையில் நடக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் பெண் வழக்கறிஞர்கள் முறையீடு செய்திருந்தனர். இந்த கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்து உள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.