கடந்த தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நிறுவிய கருணாஸ்க்கு தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை தொகுதியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது கூட்டணியில் இடம் கொடுத்து அதிமுக சார்பில்தான் போட்டியிடவேண்டும் என அவருக்கு சீட் கொடுத்தார்.
அந்த தேர்தலில் வெற்றியும் பெற்ற கருணாஸ், ஜெயலலிதா மறைவுக்கு பின் ஏற்பட்ட பிரச்சினைகளால் அதிமுகவினருடன் பகைத்து கொண்டார்.
தற்போதைய தேர்தலிலும் அதிமுகவினருடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் கருணாஸ் திமுக பக்கம் இருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்த்தார் இப்போது அழைப்பு வராத காரணத்தால் திமுக ஆதரவும் வாபஸ் என முக்குலத்தோர் புலிப்படை கட்சி கூறியுள்ளது.













