சமீபத்தில் மனு ஸ்ம்ருதியில் பெண்கள் விபச்சாரிகள் என கூறியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் கூறியிருந்தார். கடும் எதிர்ப்புகளை சந்தித்து வரும் திருமாவளவனின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் திருமாவளவனின் தொகுதியான சிதம்பரத்தில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று ஆர்ப்பாட்டம் நடக்க இருந்தது.
இதற்காக சென்ற பாரதிய ஜனதாவை சேர்ந்த நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட பிறகு நடிகை குஷ்பு கூறியதாவது. திருமாவளவனை நான் அண்ணன் என்றுதான் சொல்வேன் .இப்போது எப்படி அவரை அண்ணன் என்று அழைக்க முடியும் பெண்கள் அனைவரையும் விபச்சாரிகள் என்று கூறி இருக்கிறார் 3000 வருடம் முன்பு எழுதப்பட்ட நடைமுறையில் இல்லாத ஒரு விசயத்தை அவரை யார் பேச சொன்னது இப்போது இது தேவையற்றது.
அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டம்தான் தற்போது நடைமுறையில் உள்ளது. தேவையில்லாத விசயங்களை பேசக்கூடாது என குஷ்பு கூறியுள்ளார்













