உலக அழகிகளாக இதுவரை ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், பிரியங்கா சோப்ரா, லாரா தத்தா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் கடைசியாக லாரா தத்தா தான் உலக அழகியாக இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் 20 வருடங்களுக்கு பிறகு
இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்காக பங்கேற்றனர்.இந்நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்ற இளம்பெண் ஹர்னாஸ் கவுர் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். ஹர்னாஸ் கவுர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 21. இந்தியா சார்பில் லாரா தத்தா 2000-ம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார். அதன்பிறகு 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியப் பெண் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







