சில தினங்களுக்கு முன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஒரு பூம் பூம் மாட்டுக்காரரை பாராட்டி பல தளங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. நம் தளத்திலும் அவரை பற்றிய செய்திகள் வெளியிட்டு இருந்தோம்.
தெருவில் அழகாக பூம் பூம் மாட்டுடன் அழகான நாதஸ்வர இசை வாசித்த அவரை பற்றிய தகவல்களை ஜிவி பிரகாஷ் கேட்டிருந்தார். தற்போது அவரை பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளது அவர் பெயர் நாராயணன் எனவும் பெங்களூரில் வசிக்கும் அவர் கொரோனா பிரச்சினைகள் குறைந்த உடன் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் படத்தில் இணைந்து பணிபுரிய உள்ளாராம்.








