---Advertisement---

கோடைக்கால விடுமுறை 50 நாட்களாக அதிகரிப்பு – பள்ளி கல்வித்துறை!

By Sri
Published on: March 16, 2019
பள்ளி கோடைக்கால விடுமுறை
---Advertisement---

2018ம் கல்வி இறுதி ஆண்டில், 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கத்திற்கு அதிகமாக கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.முழ ஆண்டு தேர்வு எனப்படும் 3ம் கட்டத் தேர்வு ஏப்ரல் 13ம் தேதி நிறைவடைகிறது. அதன் பின் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த வருடம் மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்வுகளை விரைவில் முடிக்க பள்ளிகல்வித்துறை திட்டமிட்டது. அதனால், தேர்வு நடைபெறும் நாட்களை முன்னதாக அறிவித்து, விரைவில் தேர்வுகளை முடிப்பதோடு கூடுதலாக கோடை விடுமுறை நாட்களையும் அதிகரித்துள்ளது.ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும், அன்றே பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

பொது தேர்வு எழுதுகிற 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் கடைசி நாளுக்குள் தேர்வுகள் முடியவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.