கடந்த 2006 – 2011ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்து வந்தார் பொன்முடி. அப்போது விழுப்புரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் வெட்டி எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் ரூ.28.36 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, ராஜமகேந்திரன், ஜெயச்சந்திரன் ஆகியோர் மீது 2012ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த முன்னாள் கிராம உதவியாளர் மணி பிறழ் சாட்சியம் அளித்துள்ளார்.

விசாரணையின் போது அவர் கூறியது, சம்பவத்தன்று அரசு அதிகாரிகளின் அறிவுரைப்படி புகார் தெரிவிக்கப்பட்ட இடங்களில் சோதனை நடத்த சென்றதாக மணி சொன்னார்.
சோதனை முடிவடைந்த பின்னர் அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரிலேயே தான் கோப்புகளில் கையெழுத்திட்டதாக சாட்சி மணி சொல்லியிருந்தார். இந்த விசாரணையில் மணி திடீரென பிறழ் சாட்சியாக மாறியிருக்கிறார்.
தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு வரப்படும் இந்த வழக்கில் இதுவரை முப்பத்தி நாலு பேர் அரசு தரப்பு சாட்சியமாக சாட்சியளித்துள்ளனர். இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில் சாட்சியளித்தவர்களில் இதுவரை இருபத்தி ஏழு பேர் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் மீதான விசாரணையில் முன்னாள் கிராம உதவியாளர் மணியும் தற்போது பிறழ் சாட்சியம் அளித்துள்ளார்.













