நடிகர் சிம்பு நடித்த போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமனார் விக்னேஷ் சிவன். அதனைத்தொடர்ந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இவரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் காதலித்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர்கள் இருவரும் தங்களின் பிறந்தநாள் போது ஜோடியாக எடுத்த புகைப்படங்கள் அடிக்கடி ட்ரெண்டிங் ஆகிவிடும். இந்தியாவில் பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோளுக்கிணங்க, ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணி 9 மணிக்கு 9 நிமிடங்கள் மக்கள் அனைவரும் விளக்கை ஏற்றினர். பின்னர் அதனை தொடர்ந்து, சினிமா பிரபலங்களும் அதை செய்தார்கள்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா விளக்கு ஏற்றிய புகைப்படத்தை வெளியிட்டு அதுடன் கொரொனாவிற்கு ஒரு மெசேஜ்ஜும் கொடுத்துள்ளார். அது என்னவென்றால் அன்புள்ள கொரொனா கடவுளுக்கான வேண்டுதலின் போது மட்டுமே விளக்கை ஏற்றுவோம், இப்போது நாங்கள் உனக்காக ஏற்றுகிறோம், எங்களை பழையபடி வாழவிடு, தயவு செய்து கருணை காட்டு கொரொனா , கோ கொரொனா கோ, கொரொனா ப்ளீஸ் போய்டு என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.







