அஜீத் நடித்து சில வருட இடைவேளைக்கு பின் வந்திருக்கும் படமான இந்த படம் அஜீத் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
போதை மருந்து கும்பல்தான் படத்தின் மையக்கரு.
சமீபத்திய பல படங்களில் போதை மருந்து கும்பல் பற்றி காட்டி இருந்தாலும் இதில் காண்பித்திருப்பது வேறு.
இதில் பைக் ரேஸர்கள் சிலர் போதை மருந்து கும்பலில் இருப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரியாக பொறுப்பாக செயல்படும் அர்ஜூன் மதுரையில் இருந்து இந்த கும்பலை பிடிப்பதற்காக சென்னைக்கு அழைக்கப்படுகிறார்.
படத்தின் அஜீத் ஓப்பனிங் செம மாஸ் என சொல்லலாம். அதே போல் இடைவேளை நேரத்தில் பைக் ரேஸ் சண்டை காட்சிகள் ஹாலிவுட் ரேஞ்சில் இருக்கிறது.
வில்லன் கார்த்திகேயா மிரட்டுகிறார். தன்னுடைய ஊதாரி தம்பியும் வில்லன் கும்பலில் சேர்ந்து விட அஜீத் எப்படி அந்த கும்பலை பிடிக்கிறார் என்பதை கொஞ்சம் குடும்ப சென் டி மெண்டும் ஆக்சனும் கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் ஹெச். வினோத்.









