பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தனது படங்களை எல்லாம் வெற்றி படங்களாக மாற்ற் அயராது உழைப்பவர். கவிஞர் வாலி ஒருமுறை ஷங்கருக்கும் தனக்கும் நடந்த ஒரு சீரியஸான நிகழ்வை பற்றி பேசியிருந்தார்.
“ஜென்டில்மேன்” படத்தில் வரும் ‘சிக்கு புக்கு ரயிலே’பாடலை எழுதிய வாலி, இயக்குனரிடம் கருத்து கேட்டிருக்கிறார். ஷங்கருக்கோ அவர் எழுதியதன் மீது அதிக பிடித்தம் இல்லையாம். வாலியிடம் என்ன சார் இது ‘சிக்கு புக்கு’ என என்னலாமோ வருது. இது சரியாக இல்லை, எனக்கு திருப்தி இல்லை என சொல்லியிருக்கிறார்.
இது ரயில் நிலையத்தில் உள்ள போர்டர்கள் பாடுவது போலே ஆரம்பிக்கும் என சொன்னீர்களே ஷங்கர். அதனால் இது தான் சரியாக வரும். அது மட்டுமல்லாது பிரம்மாண்ட வெற்றியையும் படைக்கும் என வாலி ஷங்கருக்கு நம்பிக்கையும் கொடுத்துள்ளார்.
ஆனால் ஷங்கரோ இல்லை இது எனக்கு பிடிக்கவில்லை, வேறு பல்லவி எழுதித்தாங்க என கேட்க வாலியும் மறுகனமே எழுதி கொடுத்திருக்கிறார். பாடல் ரெக்கார்டிங்கின் போது தான் ஒரு டுவிஸ்ட் வைத்தாராம் ஷங்கர். வாலி முதல் முதலாக எழுதி கொடுத்த பல்லவியை வைத்து பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுக்கொண்டிருந்ததாம்.

நான் முதலிலேயே இதைத்தானே சொன்னேன். நீ வேற வேணும்னு கேட்டுட்டு இப்போ என்ன வம்பு இழுக்கறியா? என்ன கோபமாக பேசி இனிமேல் உன் படத்திற்கு நான் பாட்டு எழுத மாட்டேன் என கோபித்து கொண்டு சென்றுவிட்டாராம்.
அதன் பின்னர் பார்க்கும் இடங்களிலெல்லாம் அண்ணன், அண்ணன் காட்டிய அன்பு தான் வாலியை மனமிறங்க செய்ததாம். அதனால்தான் அவருடைய படங்களில் மீண்டும் பாடல்கள் எழுத துவங்கியதாக மேடையில் பேசும்போது சொல்லி இருந்தார் வாலி.







