---Advertisement---

கேபிள் டிவி புதிய கட்டண முறைக்கு அவகாசம் நீட்டிப்பு…

By Sri
Published on: February 12, 2019
கேபிள் டிவி புதிய கட்டண முறைக்கு அவகாசம்
---Advertisement---

கேபிள் டிவியின் புதிய கட்டண முறையை அமுல்படுத்த மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கேபிள் டிவியில், பொதுமக்கள் தாங்கள் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து பணம் செலுத்தும் புதிய கட்டண முறையை கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் மாற்றியமைக்க வேண்டும் என டிராய் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதனால் ரூ.250 க்கு மேல் செலுத்த வேண்டிய நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டது.

எனவே, புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்ததை . இதை ஏற்ற டிராய் கேபிள் டிவியில் புதிய கட்டண முறையை அமுல்படுத்த வருகிற மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது.

இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.