சூர்யா தேவியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. யாரையாவது எதிர்த்து பேசி வசவு வார்த்தைகளில் திட்டுவதே இவரது பாணி. இதற்கு முன் தற்போதைய கவர்னரும் முன்னாள் தமிழக பாஜக தலைவருமான தமிழிசையை திட்டினார்.
பின்பு வனிதா விஜயகுமாரை திட்டினார். திட்டுவதோடு மட்டுமல்லாமல் கெட்ட கெட்ட வார்த்தைகளில் மோசமாக பேசி வருவதை இவர் வழக்கமாக வைத்துள்ளார்.
இவ்வளவு செய்தாலும் போலீஸ் இவர் மீது எடுக்கும் நடவடிக்கை பெரிய அளவில் இல்லை என்பதே வருத்தம்.
சமீபத்தில் கூட மதுரைக்கு சென்று அங்கு இருந்த ஒரு டிக் டாக் பிரபலம் சிகா என்பவருடன் சண்டை காரணமாக செருப்பால் அடித்து விட்டு சென்றார்.
இன்று சூர்யா தேவி தூக்கு போட்டுக்கொள்ள போவதாக மதுரை காவல் ஆணையருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.போலீசார் கதவை உடைத்து பார்த்த நிலையில் அவர் நாடகம் ஆடினார் என்பதை தெரிந்து எச்சரித்து விட்டு வந்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் மிக மோசமாக பேசும் இவர் மீது போலீஸ் இதுவரை கடும் நடவடிக்கை எடுக்காதது ஏனோ தெரியவில்லை.








