பெருமாளுக்குரிய முக்கிய விழாக்களில் ஒன்றாக வைகுண்ட ஏகாதசி திருவிழா கொண்டாடப்படுகிறது. அனைத்து வைணவ ஆலயங்களிலும் இந்த வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.
திருப்பதியிலும் இவ்விழா களை கட்டி வரும் நிலையில் வரும் 25ம் தேதி முதல் 3ம் தேதி நடைபெற இருக்கும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவுக்கு திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட இருக்கின்றன. இதற்காக 5 டிக்கெட் கொடுக்கும் மையங்கள் செயல்படுகின்றன.
ஒரு நாளைக்கு 17முதல் 18மணி நேரம் 35 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் உள்ளூர் மக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது








