‘காந்தாரா’ பார்த்தப்போவே தெரியும்… இதோட ஆரம்பம் சும்மா இருக்காதுன்னு! கரெக்ட்! அந்த எதிர்பார்ப்பை எல்லாம் தாண்டி, ‘காந்தாரா: அத்தியாயம் 1′ இப்போ ரிலீஸாகி தியேட்டர்ல அனல் பறக்குது! இத்தனைக்கும் இது, முதல் பாகத்துக்கு முன்னாடி நடந்த கதை!
வருஷம் 300-ல, காட்டுல வாழ்ந்த மக்களுக்கும், நிலத்தை ஆக்கிரமிக்க வந்த ராஜாவுக்கும் இடையிலான போராட்டம் தான் களம். வெறும் சண்டையில்லை… மனுஷனுக்கும் தெய்வ சக்திக்கும் இடையிலான யுத்தம்! சிவன் அடியாரான பெர்மே-வா (காதப்பாத்திரம்) நம்ம ரிஷப் ஷெட்டி பண்ணியிருக்கிற ட்ரான்ஸ்ஃபர்மேஷன் இருக்கே… அடடா! அதுக்குன்னு ஒரு வெறி, ஒரு உக்கிரமாவது இருக்கணும்ல! மொத்தக் கதையுமே அந்த சாவுண்டி தெய்வத்தின் ஆரம்பப் புள்ளியைத் தொட்டுப் பேசுகிறது!

படத்தோட முதல் பாதி ஸ்லோவாக் நகர்ந்தாலும், அடுத்த பாதியில் ரிஷப் ஷெட்டி கொடுத்த விசுவல் ட்ரீட்மென்ட், க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சி… சும்மா இல்லை, கூஸ்பம்ஸ் கேரண்டி! ஒரு சினிமாவை வெறும் படமாப் பார்க்காம, ஒரு சடங்காப் பார்க்கணும்னா, இந்த ‘ஆதி காந்தாராவை’ தியேட்டர்ல பாருங்கோ! நிச்சயம், தியேட்டரை விட்டு வெளியில வந்தாலும் அந்தக் காட்டு வாசம் மனசுல ஒட்டிக்கும்!








