அரண்மனை 3 படம் தயாராகி வருகிறது இதற்கு முன் அரண்மனை 1,2 பாகங்களை இயக்கிய சுந்தர் சியே இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஆர்யா, ராஷிகண்ணா, விவேக், யோகிபாபு, மனோபாலா என பலர் நடித்துள்ளனர்.
அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது இப்படம். தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்யப் படக்குழு தீர்மானித்துள்ளது. ‘அரண்மனை 3’ கிளைமேக்ஸ் காட்சிக்காக மட்டுமே 1.5 கோடி ரூபாய் செலவில், 300 தொழிலாளர்கள் அர்ப்பணிப்பில் பிரம்மாண்டமான அரங்கத்தை உருவாக்கி, படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள்.
அதில் 200 கலைஞர்கள் பங்கேற்க 16 நாட்கள் படமாக்கியுள்ளனர். கிளைமேக்ஸ் காட்சியின் கிராபிக்ஸ் பணிகள் மட்டுமே 6 மாதங்கள் நடைபெற்றன. ‘அரண்மனை 3’ படத்தின் ஒளிப்பதிவாளராக யு.கே.செந்தில்குமார், இசையமைப்பாளராக சத்யா, எடிட்டராக பென்னி ஆலிவர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

