கதாநாயகனாக மட்டுமல்லாமல் “பி.டி.சார்” படத்தில் இசையமைப்பாளராகவும் தனது பணியை தொடர்ந்து உள்ளார் ஹிப்-ஆப் தமிழா ஆதி. இசையமைப்பாளராக அவரது 25வது படம் இது. “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு” படத்தினை போலவே இதிலும் சமூகத்திற்கு தேவயான கருத்தை கையில் எடுத்து, தனது கதையை படமாக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் வேணு கோபால்.
கரீஷ்மா பர்தேசி, அனிகா சுரேந்திரன், பிரபு, பாக்யராஜ், பாண்டியராஜன், தியாகராஜன், வினோதினி, தேவதர்ஷினி உட்பட பலர் நடித்துள்ள “பி.டி.சார்” படத்திதை வேல்ஸ் இண்டர்நேஷனல் ஐசிரி கணேசன் தயாரித்திருக்கிறார். தான் உண்டு, தனது வேலை உண்டு என வாழ்ந்து வருபவர் நாயகன் ஆதி. தியாகராஜனின் பள்ளிக்கூடத்தில் பி.டி.வாத்தியாராக சேர்கிறார்.
தனது மாணவியான அனிகாவிற்கு நேர்ந்த கொடூரத்தை கண்டு ஆத்திரப்படுகிறார் ஆதி.

எதற்காக போராடுகிறார் என்பதை சொல்ல ஒரு ஃப்ளாஷ் பேக், அதில் எப்படி வெற்றி பெருகிறார் என்பதே படத்தின் கதை. ஆதி நடிப்பில் தேரிவருகிறார் என்பது தெரிந்துள்ளது. அனிகா நடிப்பில் அசத்தியிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக பார்த்தே பழக்கப்பட்டவர் பக்குவமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கொஞ்ச நேரம் மட்டுமே வந்தாலும் வழக்கம் போல ஸ்கோர் பண்ணிவிட்டார் பிரபு. தியகராஜன், பாண்டியராஜன் இருவரின் பங்களிப்பு சிறப்பு. பாக்யராஜை இன்னும் வேலை வாங்கியிருக்கலாம் போலயே என நினைக்க வைக்கிறது. படத்திற்கு ஒளிப்பதிவு, பின்னனி இசை பலம்.
பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கவில்லை என சொல்கிறார்கள். திரைக்கதையில் வேகம் இருந்தாலும், ஆங்காங்கே சிறு தொய்வு தெரிகிறது படத்தில். இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம் கதையை எனவும் நினைக்க வைக்கிறது.
கோடை விடுமுறை முடிவுக்கு வரும் நேரத்தில் வெளிவந்துள்ளது படம். “பி.டி.சார்” தேவையில்லாமல் பிரம்பை கையில் எடுக்கவில்லை. அதே போல பெண் கொடுமையில் ஈடுபடுகிறவர்களுக்கு சவுக்கடி கொடுப்பது போல படம் வந்திருப்பது பாராட்டுதலுக்குரியது. ஒரு முறையாவது படத்தை பார்த்துவிட வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும். மொத்தத்தில் இந்த “பி.டி,சார்” மனதில் இடம் பிடிக்கிறார்.