சூர்யா மீது தொடர் விமர்சனங்களூம் ஆதரவும் சமீபகாலமாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. நீட் தேர்வு வேண்டாம் என மாணவர்கள் தற்கொலை குறித்து அவர் விட்ட அறிக்கையினால் இந்த விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சூர்யா தமிழக அரசுக்கு திடீரென நன்றி தெரிவித்துள்ளார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மாணவர்களுக்கு துணை நிற்போம்… ஒன்றிணைந்து செயல்படுவோம் என சூர்யா தெரிவித்துள்ளார்.








