---Advertisement---

திரையரங்குக்கு செல்ல தடுப்பூசி- சுரேஷ் காமாட்சி கண்டனம்

Published on: November 22, 2021
---Advertisement---

சமீபத்தில் திரையரங்கு, கோவில் போன்றவைகளுக்கு செல்ல தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பலரும் இன்னும் தடுப்பூசி போடாத நிலையில் அண்ணாத்தே படத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது மாநாடு படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் தடுப்பூசி போட்டால்தான் திரையரங்கு உள்ளே போக முடியும் என கட்டாயப்படுத்தினால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்பது உண்மை.

இதை மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் வலியுறுத்தியுள்ளார். உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை… அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும் என சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.