“விடுதலை” படத்தின் மூலமாக கதாநாயகனாக மாறினார் சூரி. அதற்கு முன்னர் காமெடியனாக மட்டுமே பார்த்து பழக்கப்பட்டவர். “வெண்ணிலா கபடி குழு”படத்தின் மூலம் கிடைத்தது பாப்புலாரிட்டி சூரிக்கு. வரிசையாக வெற்றி படங்கள் தான். ‘புரோட்டா’சூரியாக தமிழ் சினிமாவில் ரவுண்டு வர துவங்கினார்.
தான் சினிமாவில் நுழைந்தது பற்றி பேசிய சூரி, “மறுமலர்ச்சி” படத்திற்காக துணை நடிகர் எல்லாம் ஒரு வாகணத்தில் திருவண்ணாமலைக்கு கிளம்ப தயாராக இருந்தார்களாம். ஏ.வி.எம்.ஸ்டூடியோவுக்கு முன்னர் இருந்து கிளம்ப தயாராக இருந்தனராம்.

சூரிக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த சுமதி என்பவர் தான் சூரிக்கு ரெக்கமென்ட் செய்தார்களாம். அதற்கு பிறகு தான் அவருக்கு அனுமதி கிடைத்துள்ளது வண்டியில் ஏற.
ஷூட்டிங் ஸ்போட்டிற்கு ஒரு வழியாக வந்து சேர்ந்தாராம் சூரி அவருடன் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த சூரியுன் நண்பரும் போயிருக்கிறார். சூரிக்கு வாய்ப்பு கிடைக்க சுமதி அக்கா தான் காரணம் என அவரே சொல்லியிருந்தார்.
“மறுமலர்ச்சி” படத்தில் வரும் மார்க்கெட் சீன் எடுக்கும் போது தான் முதன் முதலாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியை பார்த்தாராம். மம்மூட்டிக்கு பக்கத்தில் தான் நின்றதை தன்னால் முதலில் நம்பவே முடியவில்லை என சொன்னார் சூரி.
“கருடன்” வெளியான பிறகு இனி சூரியைகாமெடியனாக பார்க்க முடியாது. ஹீரோவா மட்டும் நடிங்கன்னு சொல்ற அளவுக்கு இன்றைக்கு சூரி தமிழ் சினிமாவின் ஹிட் லிஸ்ட் ஹீரோவாக மாறி விட்டார்.








