சிரஞ்சீவி தற்போது நடித்து வரும் படம் ஒன்றில் சோனு சூட் வில்லனாக நடிக்கிறார். சோனு சூட் தமிழில் ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் .சமீப காலமாக சோனு சூட் மிக மரியாதைக்குரிய நபராக சமூகத்தில் பார்க்கப்படுகிறார்.
கடந்த 8 மாதத்தில் சோனு சூட் மீது உள்ள மரியாதை மளமளவென ஏறிவிட்டது. இவர் கொரோனா காலத்தில் ஏழைகள் அனைவரையும் அரவணைத்து சென்றார். எல்லோருக்கும் ஓடி ஓடி சென்று தனி நபராக உதவி செய்தார்.
இதனால் ஐநாவின் சிறந்த மனித நேயர் விருதும் பெற்றார். தனது சொத்துக்களை 10 கோடிக்கு அடமானம் வைத்து கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவி செய்தார்.
இதனால் அவர் மீது தனி மரியாதை வைத்துள்ள சிரஞ்சீவி இருவரும் இணைந்து நடித்து வரும் புதிய படத்தில் சோனு சூட்டை அடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கருதி அந்த காட்சியையே மாற்றி வைக்க சொல்லி விட்டாராம் அதனால் அக்காட்சி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாம்.









