‘அமரன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ‘ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ (RKFI) கூட்டணியில் மீண்டும் உருவாகி வரும் திரைப்படம் ‘சேயோன்’ (Seyon). சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் கிராமத்து பின்னணியில் உருவாகும் இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மே 18 முதல் மதுரையில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிவகார்த்திகேயன், படம் குறித்தும் தமிழக அரசியல் சூழல் குறித்தும் எதார்த்தமாகப் பேசியுள்ளார்.

“மதுரை மண்ணுக்கு எப்போதுமே ஒரு தனி பவர் இருக்கிறது; அந்த பவர் துளிகூட குறையாமல் சேயோன் திரைப்படம் மிக சிறப்பாக இருக்கும்” என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். செக்கானூரணி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்து திருவிழா பின்னணியில், முருக வழிபாட்டை மையமாக வைத்து ஆக்ஷன் எண்டர்டெய்னராக இப்படம் செதுக்கப்பட்டு வருகிறது. “எனது முந்தைய கிராமத்து கதைகளை விட, இது அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் ஒரு தரமான மாஸ் மற்றும் எமோஷனல் படைப்பாக அமையும்” என்று எஸ்கே மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். பாக்கியஸ்ரீ போர்ஸே நாயகியாக நடிக்கும் இப்படத்தின் கிராமத்து லுக் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள திரையுலகின் முன்னணி நட்சத்திரம் சி. ஜோசப் விஜய்க்கு (CM Joseph Vijay) சிவகார்த்திகேயன் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இதுகுறித்து பேசிய அவர், விஜய் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் நாளே தான் தொலைபேசி மூலம் நேரடியாகத் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டதாகக் குறிப்பிட்டார். அரசியல் களத்தில் இவ்வளவு பெரிய இமாலய வெற்றியைப் பெற்று, முதல்வர் நாற்காலியில் அமர்ந்த பிறகும், விஜய் அண்ணன் அதே பழைய பாசத்தோடும் அன்போடும் தன்னிடம் நலம் விசாரித்ததாக எஸ்கே செய்தியாளர்ச சந்திப்பில் நெகிழ்ந்து போய்க் கூறினார்.
திரையுலகைப் போலவே மக்கள் பணியிலும் தமிழக முதல்வர் விஜய் மிகச் சிறந்ததொரு ஆட்சியைத் தருவார் என்று சிவகார்த்திகேயன் உறுதிபடக் கூறினார். ‘சேயோன்’ திரைப்படத்தின் பூஜை மற்றும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சிவகார்த்திகேயன் பேசிய இந்த இரட்டை அதிரடி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ஒருபுறம் சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிரட்டி வரும் நிலையில், மறுபுறம் எஸ்கேவின் ‘சேயோன்’ படத்தின் மதுரை அப்டேட்டும், முதல்வர் விஜய் குறித்த அவரது நெகிழ்ச்சியான ஸ்டேட்மெண்ட்டும் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் தற்போதைய ஹாட் டாப்பிக் ஆகியுள்ளது.













