தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) தனது திரைப்பயணத்தில் புதியதொரு முடிவை எடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் பிரபல நகைக்கடை திறப்பு விழா விளம்பரத்தில் தோன்றியதைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் வரவிருக்கும் மாதங்களில் மேலும் பல வணிக ரீதியான விளம்பரப் படங்களில் (Commercial Advertisements) நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காக முன்னணி விளம்பர ஏஜென்சிகளுடன் அவர் தீவிர ஆலோசனைகளை நடத்தியுள்ளதாகவும், தனது சினிமா இமேஜுக்குப் பொருத்தமான மற்றும் மதிப்பு சேர்க்கக்கூடிய நான்கு பிரீமியம் பிராண்டுகளுடன் மட்டும் ஒப்பந்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அவர் நடித்து வரும் ‘சேயோன்’ (Seyon) திரைப்படப் பணிகளை முடித்த பிறகே தனது அடுத்த முழுநீளப் படத்தைத் தொடங்கவுள்ளதால், அந்த இடைவெளியை விளம்பரப் படங்களிலும் பிராண்ட் எண்டார்ஸ்மென்ட்களிலும் கவனம் செலுத்த அவர் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார்.













