கொங்கு மண்டலமான கோவையை சேர்ந்தவர் நடிகர் சத்யராஜ். இவருக்கு சொந்தமான பங்களா கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ளது. நேற்று இங்கு திடீரென வந்த காட்டு யானைகள் வந்து சத்யராஜின் பங்களாவை முற்றுகையிட்டன.
அங்கு வயல்வெளிக்கு பாய்ச்சப்படும் தண்ணீரை அருந்தி தாகத்தை தீர்த்துக்கொண்டன.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைக்கூட்டங்களை ஊருக்குள் நுழையாமல் மலைப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.







