தமிழில் மாநகரம், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சந்தீப் கிஷன். இவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார்.
இந்த சவாலான காலகட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக கொரோனா தொற்றுக்கு தங்கள் பெற்றோரை இழந்த குழந்தைகள் யாரேனும் உங்களுக்கு தெரிந்தால், அவர்களைப் பற்றி கீழ்கண்ட இ மெயில் முகவரியில் தெரியப்படுத்துங்கள்.
நானும் என்னுடைய குழுவினரும் எங்களின் சக்திக்கு உட்பட்ட வகையில் அது போன்ற குழந்தைகளின் அடுத்த இரண்டு ஆண்டுக்காக உணவு மற்றும் கல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்கிறோம். இது சோதனைக் காலம். இதில் மனிதர்களாக ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்பதே முக்கியம் “ என்று முகவரியை பதிவிட்டுள்ளார்.
கீழ்கண்ட முகவரிக்கு தகவல்களை அனுப்பவும் என சந்தீப் கிசன் குறிப்பிட்டுள்ளார் அவரின் இமெயில் முகவரி இதோ.







