ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால் ஆண்கள் கடந்த ஒரு மாதமாக முடிதிருத்திக் கொள்ள முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் 25 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல அத்தியாவசிய தேவைகளை செய்து கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது முக்கியமாக ஆண்கள் தங்கள் தலைமுடி மற்றும் தாடியை திருத்திக் கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், தனது முடியை தானே வெட்டிக் கொண்டார். இதுகுறித்து புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.







