---Advertisement---

ராமாயணம் குறித்து எம்.ஆர் ராதா சொன்னது- ராதிகா வெளியிட்ட புதிய தகவல்

Published on: March 1, 2021
---Advertisement---

நடிகர் எம்.ஆர் ராதா கடவுள் நம்பிக்கையற்றவர். இவர் திருவாரூர் தங்கராசு நடிப்பில் நடித்த நாடகமான ரத்தக்கண்ணீரில் நாத்திக கொள்கைகளை அள்ளி வீசி இருப்பார். அது படமாகவும் பின்பு வந்தபோது அதிலும் செம நக்கலாக ஆத்திகத்தையும் கடவுள் நம்பிக்கையையும் கிண்டல் செய்திருந்தார். ரத்தக்கண்ணீர் திரைப்படம் பெரிய வெற்றி அடைந்து எம்.ஆர் ராதாவின் நக்கலான டயலாக்குகள் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானது.

இன்று ராதிகா ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் எம்.ஆர் ராதா ராமாயணம் பற்றி திருச்சியில் நாடகம் நடத்துவது பற்றி ஒரு போஸ்டர்  அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் ராமாயணம் நாடகம் இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது என்பவர்கள் என் நிகழ்ச்சிக்கு வரவேண்டாம் . அவர்கள் காசும் எனக்கு வேண்டாம் மீறி வந்து பார்த்து அவர்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் ஜவாப்தாரியல்ல என எம்.ஆர் ராதா வெளியிட்ட ஒரு பழமையான அறிவிப்பை  ராதிகா வெளியிட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.