கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் நீண்ட வருடங்களாக சினிமா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
கமலை மட்டும் வைத்து படம் தயாரிக்காமல் சத்யராஜ், விக்ரம் போன்றோரையும் வைத்து இந்த நிறுவனம் படம் தயாரித்துள்ளது.
புகழ்பெற்ற இந்த நிறுவனத்தில் காசாளராக பணியாற்றியவர் முரளி. இவர் நேற்று மரணம் அடைந்தார்.
இவரின் மரணத்துக்கு நடிகரும் ராஜ்கமல் பட நிறுவன அதிபருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
எங்கள் RKFI நிறுவனத்தில் காசாளராக 32 ஆண்டுகள் பணியாற்றிய எஸ். முரளியை இன்று இழந்துவிட்டோம். அவரது குடும்பத்திற்கும், எங்களுக்கும் மிகப்பெரிய இழப்பு. மிஸ் யூ முரளி.. நீங்கள் இவ்வளவு சீக்கிரம் விடைபெற்றிருக்க வேண்டியதில்லை.. இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
எங்கள் RKFI நிறுவனத்தில் காசாளராக 32 ஆண்டுகள் பணியாற்றிய எஸ். முரளியை இன்று இழந்துவிட்டோம். அவரது குடும்பத்திற்கும், எங்களுக்கும் மிகப்பெரிய இழப்பு. மிஸ் யூ முரளி.. நீங்கள் இவ்வளவு சீக்கிரம் விடைபெற்றிருக்க வேண்டியதில்லை.. pic.twitter.com/SRQ0aJzsKg
— Kamal Haasan (@ikamalhaasan) March 31, 2022









