மாரி செல்வராஜ் கர்ணன் சர்ச்சை தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாலும், அதன் படப்பிடிப்பு தளத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவம் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் நடிகர் நட்டி நடராஜ் ஒரு பேட்டியின் போது உதவி இயக்குநர் குறித்துப் பகிர்ந்த தகவல்கள் வைரலாகி வருகின்றன.
படப்பிடிப்பில் நடந்த அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சி
கர்ணன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த நடிகர் நட்டி, சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒரு முக்கியச் சம்பவத்தை விவரித்தார். படத்தில் ஊர் மக்களைத் தாக்கும் ஒரு காட்சி படமாக்கப்பட்ட போது, நிஜமாகவே அடிப்பது போன்ற உணர்வு வர வேண்டும் என்பதற்காக மாரி செல்வராஜ் சில முயற்சிகளை மேற்கொண்டார். அப்போது நடிகர் நட்டி, நிஜமாகவே ஒருவரை அடிக்கத் தயக்கம் காட்டியுள்ளார்.
உதவி இயக்குநரை அடிக்கச் சொன்ன மாரி செல்வராஜ்?
நட்டியின் தயக்கத்தைப் பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ், “இது சும்மா டம்மி ஸ்டிக்தான், வலிக்காது” என்று கூறித் தனது உதவி இயக்குநரை அழைத்து, அடிஅடின்னு அடித்துவிட்டு, வலி இருக்கானு என்று கேட்டு உள்ளார். அந்த உதவி இயக்குநர் “வலிக்கவில்லை சார்” என்று பதில் அளித்துள்ளார்.
இருப்பினும், இயக்குநர் அங்கிருந்து சென்ற பிறகு அந்த உதவி இயக்குநர் வலியால் துடித்ததைப் பார்த்த நட்டி அதிர்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அந்த உதவி இயக்குநரிடம் கேட்ட போது, “என்ன சார் செய்ய முடியும்? அடி வாங்கும் போது ஒன்று இரண்டு அடிகளைச் சந்தித்தே ஆக வேண்டும்.” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறியதாக நட்டி அந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
சர்ச்சையும் இயக்குநரின் விளக்கமும்
இந்தச் சம்பவம் மாரி செல்வராஜ் கர்ணன் சர்ச்சை என்ற பெயரில் தற்போது மீண்டும் விவாதிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக, மாரி செல்வராஜ் தனது உதவி இயக்குநர்களை அடிப்பதாக உதயநிதி ஸ்டாலின் ஒரு நகைச்சுவையான நேர்காணலில் குறிப்பிட்டதும் சர்ச்சையானது. ஆனால், மாரி செல்வராஜ் இதனை மறுத்துள்ளார். தான் எதார்த்தத்தை திரையில் கொண்டு வர எடுக்கும் முயற்சிகள் சில நேரங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது இந்த மாரி செல்வராஜ் கர்ணன் சர்ச்சை சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்களை ஈர்த்து வருகிறது. ஒரு இயக்குநரின் அர்ப்பணிப்பு எந்த எல்லை வரை இருக்கலாம் என்பது குறித்த விவாதம் இதன் மூலம் தொடங்கியுள்ளது.












