வருமான வரி யார் யாருக்கெல்லாம் பொருந்தும், யார் எல்லாம் அதனை கட்ட வேண்டும், அதற்கு குறைந்த பட்ச வருமானம் எவ்வளவு என்பதெல்லாம் தெளிவாக சொல்லப்பட்டு விட்டது ஏற்கனவே.
நிர்ணயிக்கப்பட்ட அளவு வருமானம் பெறும் தனி நபர், நிறுவனங்கள் அல்லது பிற வரி செலுத்துவோர் ஆண்டுதோறும் தங்களது வருமான கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இதனை கட்டி முடிக்க எப்போதுமே ஒரு குறிப்பிட்ட தேதி வரை கால அவகாசம் கொடுக்கும் அரசு. அந்த தேதியில் கட்ட தவறினால் அதற்கான அபராதததையும் சேர்த்து கட்டும் நிலை ஏற்பட்டு விடும்.
இன்கம் டேக்ஸ் ரிட்டன்ஸ் தாக்கல் செய்வதற்கான இந்தாண்டிற்கான கடைசி தேதி அறிவிக்கப்பாட்டுள்ளது.
அதன்படி மாத சம்பளம் பெறுபவர்கள் அல்லது பிற வரி செலுத்துவோர் தங்களது வருமான வரிக்கணக்குகளை ஜுலை முப்பத்தி ஒன்றாம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும், இதே போல தணிக்கை செய்யப்பட வேண்டிய கணக்குகள் அக்டோபர் முப்பத்தி ஒன்றாம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
பிரிவு 92இ கீழ் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய வரி செலுத்துவோர் தங்களது வரிக் கணக்கை நவம்பர் முப்பதாம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

அனைத்து வரி செலுத்துவோரும் தாமதமாக ஐடி ரிடன்ஸ் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 ஆகும். திருத்தப்பட்ட ஐடிஆர் டிசம்பர் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட உள்ளது.
குறிப்பிட்ட தேதிக்குள் வருவான வரிக் கணக்கு தாக்கல் செய்யாத வரி செலுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.வரி செலுத்துவோர் அபராதம் செலுத்துவதைத் தவிர மற்ற வரிசலுகைளையும் இழக்கின்றனர்.













