தமிழ்நாடு கவர்னராக சில நாட்களுக்கு முன் பதவியேற்று கொண்டவர் திரு ஆர்.என் ரவி. சமீபத்தில் தமிழ்நாட்டில் அதிகமான இடங்களில் உள்ளாட்சி தேர்தல்கள் நடந்தது. பல இடங்களில் சண்டை சச்சரவுடன் நடந்து முடிந்தது இந்த தேர்தல்.
சில இடங்களில் முறைகேடுகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஆளும் கட்சியாக இருக்கும் திமுக முறைகேட்டில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
இந்த நிலையில் கவர்னர் ஆர்.என் ரவியை நேரில் சந்தித்து, இது தொடர்பாக முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சிதலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்தலில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க கோரியுள்ளார்.













